க்ரைம்
பெண்கள் விடுதியில் புகுந்து பாலியல் அத்துமீறல்
சென்னை கீழ்பாக்கம் பெண்கள் விடுதியில் புகுந்து பாலியல் அத்துமீறலில் ஈடு?...
தருமபுரி அருகே மர்மமான முறையில் உயிரிழந்த மகனின் இறப்பு குறித்து காவல்துறை விசாரணை நடத்தவில்லை என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க தாய் புகார் தெரிவித்தார். வேடகட்டமடுவு கிராமத்தைச் சேர்ந்த சுள்ளான், ஈட்டியம்பட்டி கிராமத்தை சேர்ந்த சபினா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். காதலியை பார்ப்பதற்கு இரவு நேரத்தில் ஈட்டியம்பட்டிக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்த அவர், கடந்த டிசம்பர் 2ஆம் தேதி சாலை ஓரத்தில் உயிரிழந்து கிடந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து வந்த உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால் போலீசார் விசாரணை மேற்கொள்ளாமல் 2 மாதங்களாக காலம் தாழ்த்தி வருவதாக கூறப்படுகிறது. இதனால் வேதனை அடைந்த தாய், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
சென்னை கீழ்பாக்கம் பெண்கள் விடுதியில் புகுந்து பாலியல் அத்துமீறலில் ஈடு?...
சென்னை திருவொற்றியூர் ரயில் நிலையத்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை ...