தாயையும், தம்பியையும் கொலை செய்த இளைஞர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை திருவொற்றியூரில் தாயையும், தம்பியையும் கொலை செய்து மூட்டை கட்டி வைத்த மூத்த மகனை போலீசார் கைது செய்தனர்.

சென்னை திருவொற்றியூரில் உள்ள திருநகரை சேர்ந்தவர் பத்மா. இவரது கணவர் முருகன் ஓமன் நாட்டில் ஓட்டுநராக பணிப்புரிந்து வருகிறார். பத்மா தனது இரண்டு மகன்களான நிதி சுடன், நித்திஷ் ஆகியோருடன் வசித்து வந்தார். இந்நிலையில், வீட்டில் இருந்த தாய் பத்மாவையும், தம்பி நிதி சுடனையும் கொலை செய்த நித்திஷ், அவர்களின் உடலை மூட்டை கட்டி வைத்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார். தகவலறிந்து வீட்டிற்கு வந்த உறவினர் மகாலட்சுமி, உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வண்ணாரப்பேட்டை போலீசார், 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த நித்திஷை தீவிரமாக தேடி வந்தனர். இதனிடையே, குப்பம் கடற்கரையோரத்தில் உறங்கி கொண்டிருந்த நித்திஷை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்படும் விசாரணைக்கு பின்னரே கொலைக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Night
Day