திண்டிவனம்: திருமணமாகி 5 ஆண்டுகளே ஆனநிலையில் இளம்பெண் தற்கொலை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திண்டிவனத்தில் திருமணமாகி 5 ஆண்டுகளேஆன இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில், பிரேத பரிசோதனைக்கு தாமதமானதால் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். முருங்கம்பாக்கம் பகுதியை சேர்ந்த, மணிகண்டனுக்கும், அபிநயா என்ற பெண்ணுக்கும் கடந்த 2019ம் ஆண்டு திருமணம் ஆனது. இந்நிலையில், அபிநயா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். திருமணமாகி 5 ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதால், உடலை விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்குமாறு, திண்டிவனம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அபிநயாவின் உறவினர்கள், மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Night
Day