திண்டுக்கல்: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் காதலியின் தாயார் கொலை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த பெண்ணை கொலைசெய்த நபரை போலீசார் கைது செய்தனர். ஜி.நடுப்பட்டியை சேர்ந்த நாகராணியின் மகள் மாசிலாமணிக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ள நிலையில், கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பிரிந்து தனது தாயுடன் வசித்து வந்தார். இந்நிலையில் விட்டல்நாயக்கன்பட்டியைச் சேர்ந்த முருகேசன் என்பவருக்கும் மாசிலாமணிக்கும் பழக்கம் ஏற்பட இருவரும் நெருக்கமாக இருந்து வந்துள்ளனர். இதுகுறித்து மாசிலாமணியின் தயார் நாகராணி தொடந்து கண்டித்து வந்ததால் ஆத்திரமடைந்த முருகேசன், நாகராணியை கொலைசெய்துவிட்டு புதுச்சேரிக்கு தப்பியோடியுள்ளார். இதனையடுத்து வழக்குபதிந்த போலீசார் முருகேசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Night
Day