திண்டுக்கல்: தங்கையின் தற்கொலைக்கு காரணமான நபர் கத்தியால் குத்தி கொலை - 2 பேர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திண்டுக்கல் அருகே தங்கையின் தற்கொலைக்கு காரணமான நபரை கத்தியால் குத்தி கொலை செய்த அண்ணன் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். பூம்பாறை பகுதியை சேர்ந்த குணா என்பவரை, அதே பகுதியை சேர்ந்த தாமரைச்செல்வி என்ற பெண் காதலித்ததாக கூறப்படுகிறது. தாமரைச்செல்வியின் காதலை குணால் ஏற்க மறுத்ததால், மனமுடைந்த அப்பெண் கடந்த ஆண்டு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால், ஆத்திரத்தில் இருந்த தாமரைச்செல்வியின் சகோதரர் தர்ம மந்திரி, தனது தங்கையின் இறப்பிற்கு காரணமான குணாளை தீர்த்தகட்ட திட்டமிட்டுள்ளார். வழக்கம்போல், குணால் பணிமுடித்துவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தபோது, அவரை வழிமறித்த தர்ம மந்திரி தனது நண்பருடன் சேர்ந்து குணாளை கத்தியால் குத்தி கொலை செய்தார். இதில், படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

Night
Day