திண்டுக்கல்: பெண்ணிடம் பர்சை பிடுங்கி கொண்டு ஓடிய நபருக்கு தர்மஅடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திண்டுக்கல் மாவட்டம் பழனி பேருந்து நிலையத்தில் பட்டப்பகலில் பெண்ணிடம் பணம் பறித்த நபரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். தாராபுரத்தை சேர்ந்த ராஜேஸ்வரி என்பவர், பழனி பேருந்து நிலையத்தில் மகனை பேருந்து ஏற்றி விடுவதற்காக வந்துள்ளார். இதையடுத்து ராஜேஸ்வரி பேருந்து ஏறும் போது மர்மநபர் ஒருவர் பர்ஸை பிடுங்கி கொண்டு ஓடியுள்ளார். இதனால் ராஜேஸ்வரி கூச்சலிடவே, அங்கிருந்த சிலர் ஓடிய நபரை விரட்டி பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். தகவலறிந்து சென்ற போலீசார் விசாரணை நடத்தியதில் திருட்டில் ஈடுபட்டவர் கொடைக்கானலை சேர்ந்த தேவா என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து அழைத்து சென்றனர். 

varient
Night
Day