திண்டுக்கல்: போலீசில் புகார் அளித்ததால் வழக்கறிஞர் வீட்டில் வெடிகுண்டு வீச்சு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே வழக்கறிஞர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜல்லிபட்டி கிராமத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துராமலிங்கம் என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த விஜய் மற்றும் கலைஞர் ஆகியோருக்கும் தகராறு ஏற்பட்ட நிலையில், இருவரும் வழக்கறிஞரை மிரட்டி உள்ளனர். இதுகுறித்து முத்துராமலிங்கம் போலீசில் புகார் அளித்த நிலையில், நேற்று நள்ளிரவு விஜய்யும், கலைஞரும் நாட்டு வெடிகுண்டு போன்ற மர்ம குண்டை முத்துராலிங்கத்தின் வீட்டின் மீது வீசிவிட்டு தப்பிச்சென்றனர். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரையடுத்து, அம்மையநாயக்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான இரண்டு பேரையும் தேடி வருகின்றனர்.

Night
Day