திண்டுக்கல்: ரயில் தண்டவாளத்தில் கற்களை வைத்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு ரயில் தண்டவாளத்தில் கற்களை குவித்து வைத்த மர்மநபர்கள் குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சின்னாளப்பட்டி அடுத்த காமலாபுரம் பிரிவு அருகில் தண்டவாளத்தில் 2 கிலோ எடை கொண்ட சுண்ணாம்பு கல்லை மர்மநபர்கள் குவித்து வைத்துள்ளனர். இந்நிலையில் நேற்றிரவு அந்த வழித்தடத்தில் சென்ற அந்தோதியதயா எக்ஸ்பிரஸ், சுண்ணாம்பு கல் மீது மோதியது. இதையடுத்து ரயிலை நிறுத்திய என்ஜின் டிரைவர், அடுத்தடுத்து குவியலாக கிடந்த சிறு சிறு கற்களை அகற்றினர். இதனால் ரயில் சுமார் 10 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டது.

Night
Day