திண்டுக்கல்: விஷம் அருந்தி மனைவியுடன் தற்கொலை செய்துகொண்ட மாற்றுத்திறனாளி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே மாற்றுத்திறனாளி மற்றும் அவரது மனைவி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை மாவட்டம் மெய்யணம்பட்டியைச் சேர்ந்த காந்தி மற்றும் அவரது மனைவி அமுதா அய்யம்பாளையத்தைச் சேர்ந்த செல்லையா என்பவரது தோட்டத்தில் வேலை செய்து வந்தனர். அவர்கள் வேலைக்கு 3சக்கர வாகனத்தில் சென்றபோது திடீரென சாலையில் மயங்கி விழுந்தனர். இதையடுத்து அவர்களை அப்பகுதி மக்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை நடத்தியதில், இருவரும் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Night
Day