திமுக எம்எல்ஏ மகன், மருமகள் மீதான ஜாமீன் மனு : வீட்டு பணிப்பெண்ணை துன்புறுத்திய வழக்கில் பிப்.6-ல் நீதிமன்றம் உத்தரவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திமுக எம்.எல்.ஏ.-வின் மகன், மருமகள் மீதான ஜாமீன் மனு மீது பிப்ரவரி 6-ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படுமென சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

வீட்டு பணிப்பெண்ணை துன்புறுத்தியதாக, பல்லாவரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன் அவரது மனைவி மர்லினா அன் ஆகியோர்~மீது நீலாங்கரை மகளிர் போலீசில் வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து ஜாமின் கோரி இருவரும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்த நிலையில், அனைத்து தரப்பு வாதங்களும் தற்போது நிறைவடைந்துள்ளன. இந்நிலையில் ஆண்டோ மதிவாணன்,~மர்லினா மீதான ஜாமீன் மனு மீது பிப்ரவரி 6-ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படுமென சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Night
Day