திமுக எம்.எல்.ஏ.வின் மகன், மருமகள் பிணை கோரிய வழக்கு : பாதிக்கப்பட்ட பெண் பதிலளிக்க உத்தரவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட திமுக எம்.எல்.ஏ.-வின் மகன் மற்றும் மருமகள் ஆகியோரின் ஜாமீன் மனுவுக்கு காவல்துறை மற்றும் பாதிக்கப்பட்ட பெண் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வீட்டு பணிப்பெண்ணை துன்புறுத்தியதாக, பல்லாவரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன், அவரது மனைவி மர்லினா  ஆகியோர் மீது நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில்  இருவரும் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே பிணை கோரி இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி பாதிக்கப்பட்ட பெண் பதிலளிக்கவும், பிப்ரவரி 21-ம் தேதி நேரில் ஆஜராகவம் உத்தரவிட்டார்.

Night
Day