திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு ரூ.908 கோடி அபராதம்

எழுத்தின் அளவு: அ+ அ-

திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு 908 கோடி ரூபாயை அபராதமாக விதித்து அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

ரிசர்வ் வங்கியின் ஒப்புதலை பெறாமல் சிங்கப்பூர் நிறுவனத்தில் பங்குகளை வாங்கியதில் சட்ட விதிகளை மீறி உள்ளதாக ஜெகத்ரட்சகன் மீது குற்றசாட்டு எழுந்துள்ளது.  அதன்பேரில், அரக்கோணம் தொகுதி திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு அமலாக்கத்துறை 908 கோடி ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.  ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்களில் நடத்திய சோதனையின் அடிப்படையில் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 89.19 கோடி ரூபாய் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. மேலும் அந்நிய மேலாண்மை சட்டத்தின் கீழ் அபராதம் விதித்து சொத்துக்களை பறிமுதல் செய்து அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

Night
Day