திருச்சியில் தலைமறைவாக இருந்த ரவுடியை சுட்டுப் பிடித்த போலீசார்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருச்சியில் ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமைறைவாக இருந்த மற்றொரு ரவுடியை போலீசார் சுட்டுப் பிடித்தனர். 

லால்குடி டால்மியாவை சேர்ந்த ரவுடி தமிழரசனுக்கு நெருக்கமாக இருப்பதில் ஏற்பட்ட போட்டியில், நவீன் என்ற ரவுடியை நேற்று முன்தினம் கலைப்புலி ராஜா என்ற ரவுடி வெட்டி கொலை செய்தார். சமயபுரம் அருகே சிறுகனூர் வனப்பகுதியில் பதுங்கி இருந்த கலைப்புலி ராஜாவை பிடிக்க முயன்ற தனிப்படை போலீசாரை அவர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து கலைப்புலி ராஜாவை போலீசார் சுட்டுப்பிடித்த நிலையில், உடனிருந்த ராஜாவின் நண்பர் ஸ்ரீநாத் தப்பிக்க முயன்ற போது அங்கிருந்த கல்லில் மோதி கீழே விழுந்தார். இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 


Night
Day