திருச்சி விமான நிலையத்தில் கடத்திவரப்பட்ட ரூ.5.6 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருச்சி விமான நிலையத்தில் தாய்லாந்தில் இருந்து கடத்திவரப்பட்ட 5 கோடியே 60 லட்ச ரூபாய் மதிப்பிலான ஹைட்ரோபோனிக் போதை பொருளை மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 


தாய்லாந்தில் இருந்து திருச்சி வரும் ஏர்ஏசியா விமானத்தில் போதை பொருள் கடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து விமானத்தில் வந்த பயணிகளிடம்  நடத்தப்பட்ட சோதனையில் பயணி ஒருவர் கொண்டு வந்த பார்சலை சோதனை செய்தனர். சோதனையில் ஒரு கிலோ எடையுள்ள 5 கோடியே 60 லட்சரூபாய் மதிப்பிலான ஹைட்ரோ போனிக் போதைப் பொருள் இருந்தது தெரியவந்தது.

varient
Night
Day