திருச்சி : குளத்திற்குச் சென்ற 8 வயது சிறுவன் நீரில் மூழ்கி பலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே குளத்தில் குளிக்க சென்ற 8 வயது சிறுவன் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான். பூனாம்பாளையத்தை சேர்ந்த புவனேஸ்வரன் என்பவருடைய மகன் சித்தார்த், நேற்று மாலை பள்ளி முடிந்து அருகில் உள்ள குளத்திற்கு குளிக்க சென்றதாக கூறப்படுகிறது. வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் காவல்துறையினர் மற்றும் தீயணைப்புதுறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அப்பகுதிக்கு சென்ற தீயணைப்புத்துறை வீரர்கள், குளத்தில் நீண்ட நேரமாக தேடி சித்தார்த்தின் உடலை மீட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Night
Day