திருச்சி: உத்தமர் கோவில் ரயில் நிலைய தண்டவாள பகுதியில் இளைஞர் உடல் மீட்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உடலில் காயங்களுடன் இளைஞர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. துடையூர் மேல்பத்து பகுதியை சேர்ந்த புகழேந்தி என்பவர் ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார். இவர் உத்தமர் கோவில் ரயில் நிலைய தண்டவாள பகுதியில் இறந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், காயங்களுடன் இறந்து கிடந்த புகழேந்தியின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Night
Day