திருச்சி: சகோதரனின் காதலியிடம் பேசியதால் இளைஞர் மீது தாக்குதல் - படுகாயமடைந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி பலி - 4 பேர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருச்சி அருகே இளம்பெண்ணிடம் பேசியதால் தாக்குதலுக்குள்ளான இளைஞர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மணிகண்டத்தை சேர்ந்த நாகராஜ் என்பவர், கொத்தனாராக வேலை பார்த்து வந்தார். இவர் அதே பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவருடைய காதலியிடம் பேசியதாக கூறப்படுகிறது. இதனை பார்த்த சதீஷின் அண்ணன் ஜெகதீசன் மற்றும் நண்பர்கள், சாமியாலப்பட்டி அருகே நாகராஜை வழிமறித்து தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த நாகராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார் ஜெகதீசன், ஒரு சிறுவன் உட்பட 4 பேரை கைது செய்தனர். 

Night
Day