திருச்சி: ஜீன்ஸ் பேண்டில் தங்கத்தை மறைத்து கடத்திய இளைஞர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருச்சி விமான நிலையத்தில் ஜீன்ஸ் பேண்டில் மறைத்து வைத்து கடத்திவரப்பட்ட 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சார்ஜாவில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் பயணித்த பயணிகளை வழக்கம் போல் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, சந்தேகத்தின்பேரில் இளைஞர்  ஒருவரை தீவிர சோதனை மேற்கொண்ட போது, அவர் தனது ஜீன்ஸ் பேண்டின் உட்புறத்திலும், பாக்கெட்டின் லேபிள் பகுதியிலும், தங்கத்தை பதுக்கி இருந்ததை கண்டுபிடித்தனர். இதனையடுத்து, அந்த நபரை கைது செய்த அதிகாரிகள்,  ஜீன்ஸ் பேண்டில் பதுக்கி வைத்திருந்த 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான 390 கிராம் தங்கத்தையும் பறிமுதல் செய்தனர்.

Night
Day