திருச்சி: நாட்டு துப்பாக்கி வெடித்ததால் பரபரப்பு - லேசான காயத்துடன் உயிர்தப்பிய நபர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருச்சி மாவட்டம் துறையூரில் நாட்டு துப்பாக்கியில் மருந்து நிரப்பியபோது திடீரென வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மணலோடை கிராமத்தை சேர்ந்த கார்த்திக் என்பவர், நாட்டுத்துப்பாக்கியுடன் பச்சமலை அடிவாரம் பகுதியிலுள்ள பழமலையான் கோவில் அருகே வேட்டைக்கு சென்றுள்ளார். அப்போது நாட்டுத்துப்பாக்கியில் வெடிமருந்து நிரப்பிய போது, எதிர்பாராத விதமாக துப்பாக்கி வெடித்தது. இதில் கார்த்திக் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இதுகுறித்து துறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Night
Day