திருச்செந்தூர் அருகே இறந்த நிலையில் ஆண் சடலம் கண்டெடுப்பு..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்த ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.


காயல்பட்டினம் சேது ராஜா தெருவை சேர்ந்த தெய்வேந்திரன் என்பவர் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் அவர் வீடு திரும்பாததால், உறவினர்கள் ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் தீவிரமாக தேடினர். இந்நிலையில், நாகன்னியாபுரம் அருகே உள்ள ஒரு வாய்க்காலில் இறந்த நிலையில்  தெய்வேந்திரனின் உடல் மீட்கப்பட்டது. இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Night
Day