திருத்தணியில் இளைஞரின் 2 கால்களை உடைத்த கஞ்சா ஆசாமிகள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் நடைபயிற்சி மேற்கொண்ட இளைஞரை தாக்கிவிட்டு தப்பியோடிய இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருத்தணி பைபாஸ் பகுதியில் உள்ள காமராஜர் நகரை சேர்ந்த பிரதீஷ் நடைபயிற்சி மேற்கொள்ள பி.எம்.எஸ். நகரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள பள்ளி அருகே 3 இளைஞர்கள் கஞ்சா போதையில் இருந்துள்ளனர். பிரதீஷ் அவர்களிடம் விசாரித்ததில் ஆத்திரமடைந்த அவர்கள் இரும்பு பைப்புகளால் பிரதீஷை தாக்கி விட்டு தப்பி ஓடியுள்ளனர். பிரதீஷ் கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் பிரதீஷை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவருக்கு இரண்டு கால்கள் உடைந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து திருத்தணி போலீசார் தப்பி ஓடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Night
Day