திருப்பத்தூர்: ஆக்கிரமிப்பு வீட்டை அகற்றிய தாசில்தாருக்கு கொலை மிரட்டல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே ஆக்கிரமிப்பை அகற்றிய தாசில்தாருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் மீது போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது. வெள்ளையனூர் பகுதியில் அரசு புறம்போக்கு இடத்தில் கட்டப்பட்ட சுப்பிரமணி என்பவரின் வீட்டை, நாட்றம்பள்ளி தாசில்தார் மற்றும் போலீசார் அகற்றினர். அப்போது சுப்பிரமணியன் மகன்கள் புனிதன், முகிலன், சத்யநாதன் ஆகியோர் தாசில்தாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து முகிலன், சத்யநாதன், புனிதன் மீது நடவடிக்கைக் கோரி, விஏஓ விக்னேஷ் நாட்றம்பள்ளி போலீசில் புகாரளித்துள்ளர்.

varient
Night
Day