திருப்பத்தூர்: ஏடிஎம் இயந்திரங்களில் கொள்ளையடிக்கும் முயற்சி தோல்வி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே இரண்டு ஏடிஎம் மையங்களில் உள்ள கண்காணிப்பு கேமராவை உடைக்கும் கொள்ளையன் குறித்த காட்சி வெளியாகியுள்ளது. வாணியம்பாடியை அடுத்த புத்துக்கோவில் பகுதியில் இந்தியா ஒன் மற்றும் எச்.டி.எப்சி என அடுத்தடுத்து இரண்டு ஏடிஎம் மையங்களை கொள்ளையன் ஒருவன் கடந்த 10 ஆம் தேதி நள்ளிரவில் புகுந்து ஏடிஎம் மையங்களை உடைத்து திருட முயன்று தோல்வியடைந்ததால் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் தனது முகம் பதிவானதை அறிந்து அதை உடைத்து சென்றுள்ளான். இதுகுறித்து புகார் எழாத நிலையில் கண்காணிப்பு காட்சிகள் வெளியாகி உள்ளது. இதில் ஈடுபட்டுள்ள நபர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Night
Day