திருப்பத்தூர்: ஓசியில் ஃபலூடா கேட்டு மதுபோதையில் தாக்குதல் நடத்திய நபர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பத்தூர் அருகே ஓசியில் ஃபலூடா கேட்டு மதுபோதையில் வடமாநில இளைஞரை தாக்க முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.  ராஜஸ்தான் பகுதியைச் சேர்ந்த ரோஷன் என்பவர் திருப்பத்தூரில் மூன்று டாட்டா ஏசி வாகனத்தில் ஐஸ்கிரீம் மற்றும் ஃபாலூடா விற்பனை செய்து வருகிறார். இதில் ஒரு வாகனத்தில், சேத்தான் என்ற வடமாநில இளைஞர், தூய நெஞ்சக் கல்லூரி முன்பு விற்பனை செய்து வந்தார். அப்போது அங்கு மதுபோதையில் வந்த நபர் ஒருவர், ஃபலூடாவை பார்சல் கட்டச் சொல்லி பணம் தராமல் இருந்துள்ளார். அப்போது, சேத்தான் பணம் கேட்டதால்  ஆத்திரமடைந்த நபர், அவரை சேர்களை கொண்டு தாக்க முற்பட்டார். இதுகுறித்த தகவலின் வழக்குப்பதிவு செய்த போலீசார், கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் சிவராஜ் கோட்டையை சேர்ந்த பிரேம் குமார் என்பவரை கைது செய்தனர். 

Night
Day