திருப்பத்தூர்: முன்விரோதம் காரணமாக அரசுப்பேருந்து ஓட்டுநர் மீது தாக்குதல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே முன்விரோதம் காரணமாக அரசு பேருந்து ஓட்டுநர் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாடபள்ளியை சேர்ந்த வேலு என்பவர், வாணியம்பாடியில் இருந்து நாராயணபுரம் வரை செல்லும் அரசு நகர பேருந்தில் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். நேற்று மாலை வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் பேருந்தை நிறுத்திவிட்டு அவர் கழிவறைக்கு சென்றுள்ளார். அங்கு வந்த 2 நபர்கள், வேலுவிடம் தனியாக பேச வேண்டும் எனக்கூறி, அழைத்து சென்று தாக்கியுள்ளனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் முன்விரோதம் காரணமாக ஓட்டுநர் தாக்கப்பட்டது தெரியவந்துள்ளது. 

Night
Day