திருப்பத்தூர்: வடமாநில இளைஞரை நாற்காலியால் அடிக்க முயன்ற போதை ஆசாமி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பத்தூர் அருகே வடமாநில இளைஞரை போதை ஆசாமி பிளாஷ்டிக் நாற்காலியால் அடிக்க பாயும் வீடியோ வெளியாகியுள்ளது. தூய நெஞ்சக் கல்லூரி முன்பு வாகனம் மூலம் சேத்தன் என்ற வட மாநில இளைஞர் ஐஸ்கிரீம் மற்றும் பலூடா விற்பனை செய்துள்ளார். அங்கு மது போதையில் வந்த நபர், 50 ரூபாய் அளவிலான பலூடா ஒன்றை பார்சல் கேட்டு பணம் தராமல் சென்றதால், அவரிடம் சேத்தன் பணத்தை கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த போதை ஆசாமி கடையில் இருந்த கண்ணாடி டம்ளர் மற்றும் பிளாஸ்டிக் நாற்காலியை எடுத்து அடிக்க முற்பட்டுள்ளார். இதனை அருகில் இருந்தவர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.

Night
Day