திருப்பரங்குன்றம் காவல் ஆய்வாளருக்‍கு பிடிவாரண்ட் - மகளிர் விரைவு நீதிபதி உத்தரவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவல் ஆய்வாளருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து ராமநாதபுரம் மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
ராமநாதபுரம் மாவட்டம் பெருநாழி காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்த ஏஜி முருகன் என்பவர் தற்போது திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் ஆய்வாளராக உள்ளார். கோவிலாங்குளம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட போக்ஸோ வழக்கு தொடர்பாக அந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக இருந்த காவல் ஆய்வாளர் ஏ.ஜி. முருகன் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்திற்கு போக்‍சோ வழக்கு தொடர்பாக சாட்சியம் அளிக்க வரவில்லை. இதையடுத்து ராமநாதபுரம் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி, காவல் ஆய்வாளர் முருகனுக்‍கு பிடி ஆணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார். 

Night
Day