திருப்பூர்: சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த போதை மறுவாழ்வு மையத்திற்கு சீல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் சட்டவிரோதமாக செயல்பட்ட போதை மறுவாழ்வு மையத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். தாராபுரத்தில் வெற்றி லைஃப் கேர் பவுண்டேஷன் சார்பில் போதை மறுவாழ்வு மையம் செயல்பட்டு வந்தது. இந்த மையத்தில் இருந்த மணிகண்டன் என்பவர் நேற்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கோட்டாட்சியர் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொள்ள சென்றபோது, கள்ளிமந்தையை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர், சட்டவிரோதமாக மையத்தை நடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து திருப்பூர் மாவட்ட மருத்துவத்துறை இணை இயக்குநர் போதை மறுவாழ்வு மையத்திற்கு சீல் வைத்து, அங்கிருந்தவர்களை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். 

Night
Day