திருப்பூர்: விபத்து காப்பீடு பணத்திற்காக நண்பனை கடத்திய கும்பல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே விபத்து காப்பீடு பணத்திற்காக நண்பனை கடத்திய கும்பலை சேர்ந்த ஒருவனை போலீசார் கைது செய்தனர். பணப்பாளையத்தை சேர்ந்தவர் கௌதம். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு ஏற்பட்ட சாலை விபத்திற்காக, 22 லட்சம் ரூபாய் காப்பீட்டுத் தொகை வந்துள்ளது. அந்த பணத்தை திருப்பூரில் உள்ள யூனியன் வங்கிக் வரவு வைத்துள்ளார். இதனை அறிந்து கொண்ட அவரது நண்பர்கள், இந்த தொகையை கேட்டு கௌதமை கடத்தி சென்று, கத்தி முனையில் மூன்று லட்ச ரூபாய்க்கு காசோலையை எழுதி வாங்கியுள்ளனர். இதனை வங்கியில் மாற்ற முயன்றபோது, நண்பர்களில் ஒருவனை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பியோடிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Night
Day