திருமணத்தை மீறிய உறவால் பெண் கொடூர கொலை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே திருமணத்தை மீறிய உறவால் பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்த நபரை போலீசார் கைது செய்தனர். 

திருவிருந்தாள்புரம் பகுதியைச் சேர்ந்த பீமராஜ் மனைவி நாகலட்சுமி. இவர்களுக்கு இரண்டரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் நாகலட்சுமி காரியாபட்டி நெடுஞ்சாலை அருகே காட்டுப்பகுதியில் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுதொடர்பாக அவரது தங்கையின் கணவரான ராஜபாண்டியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில், நாகலட்சுமிக்கும் ராஜபாண்டிக்கும் முறையற்ற உறவு இருந்ததும், தன்னை விட்டு விலக நினைத்ததால் நாகலட்சுமியை ராஜபாண்டி கழுத்தை அறுத்து கொன்றதும் தெரியவந்தது.

varient
Night
Day