திருமணமான பெண்களுக்கு வேலைமறுப்பு - அறிக்கை கேட்ட மத்திய அரசு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் திருமணமான பெண்கள் பணியமர்த்த மறுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஃபாக்ஸ்கான் நிறுவன தொழிற்சாலையில் ஆப்பிள் ஐப்போன்கள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த தொழிற்சாலையில் திருமணமான பெண்களை பணியமர்த்த மறுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. திருமணமான பெண்களுக்கு குழந்தை வளர்ப்பு உட்பட குடும்ப பொறுப்புகள் அதிகம் இருக்கும் என்பதால், பணியில் சுணக்கம் ஏற்படும் என கருதி வேளைக்கு அமர்த்துவதில்லை என ஃபாக்ஸ்கான் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து விளக்கம் அளிக்கக்கோரி தமிழக அரசுக்கு, மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

varient
Night
Day