திருவண்ணாமலையில் செல்ஃபோன் கடையின் ஷட்டரை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவண்ணாமலை நகரில் உள்ள செல்ஃபோன் கடையின் ஷட்டரை உடைத்து மர்மநபர்கள் 5 லட்சம் மதிப்புள்ள உயர் ரக செல்ஃபோன்களை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்ணா சிலை அருகே செயல்பட்டு வரும் செல்ஃபோன் கடையை திறக்‍க ஊழியர்கள் வந்தபோது, கடையின் ஷட்டர் உடைக்‍கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கடையின் உள்ளே சென்று பார்த்தபோது, உயர்ரக செல்ஃபோன்கள் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார், செல்ஃபோன் கடையின் அருகே உள்ள கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Night
Day