திருவள்ளூர்: அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கிய ஆட்டோ ஓட்டுநர் உள்பட 2 பேர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவள்ளூர் அருகே அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கிய ஆட்டோ ஓட்டுநர் உள்ளிட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர். திருவள்ளுவர் தெரு பகுதியைச் சேர்ந்த மணிவண்ணன் என்பவர், செங்குன்றம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து பாரிமுனை நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்தை இயக்கியுள்ளார். அப்போது கதிர்வேடு பேருந்து நிறுத்தத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர், பேருந்துக்கு வழி விடாமல் தொடர்ந்து சாலையில் தாறுமாறாக ஆட்டோவை இயக்கியுள்ளார். இதுகுறித்து ஓட்டுநர், ரெட்டேரி போக்குவரத்து காவலரிடம் புகார் அளித்துவிட்டு பேருந்தை அகரம் சிக்னலை நோக்கி இயக்கியுள்ளார். அப்போது அவரை வழிமறித்த ஆட்டோ ஒட்டுநர் நந்தகுமார் மற்றும் பிரேம்குமார், பேருந்து ஓட்டுநரின் தலையில் கல்லை கொண்டு தாக்கி தப்பித்து ஓடினர். இதனையடுத்து ஓட்டுநரை தாக்கிவிட்டு தப்பிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். 

Night
Day