திருவள்ளூர்: அரசு பேருந்து மீது பள்ளி மாணவர்கள் கல்வீச்சு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே பள்ளி மாணவர்கள், கல்லால் தாக்கியதில் அரசு பேருந்தின் கண்ணாடி உடைந்ததாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஊத்துக்கோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து செங்குன்றத்திற்கு தாமதமாக பேருந்துகள் இயக்கப்படுவதால் மாணாக்கர்கள் பள்ளி செல்வதில் சிரமம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ஊத்துக்கோட்டையில் இருந்து செங்குன்றம் நோக்கி சென்ற அரசு பேருந்தை, பாலவாக்கம் அருகே அடையாளம் தெரியாத பள்ளி மாணவர்கள் கல்லால் தாக்கியுள்ளனர். இதில், பேருந்தின் பின்புற கண்ணாடி முற்றிலும் உடைந்து சேதமடைந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பேருந்து ஓட்டுநர், ஊத்துக்கோட்டை போலீசில் புகார் அளித்துள்ளார்.

Night
Day