திருவள்ளூர்: இருசக்கர வாகனம் மற்றும் செல்போனை பறித்து சென்ற மர்ம நபர்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவர்களை வழிமறித்து செல்போன் மற்றும் இருசக்கர வாகனத்தை பறித்துச் சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். திருவாலாங்காட்டைச் சேர்ந்த பாலமுருகன் தனது நண்பருடன், பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார். அப்போது கம்மாவார்பாளையம் அருகே அவர்களை வழிமறித்த 2 பேர் செல்போன் மற்றும் இருசக்கர வாகனத்தை பறித்துக் கொண்டு தப்பிச்சென்றுள்ளனர். இதுகுறித்து மணவாள நகர் போலீசார் வழக்குப்பதிந்து, வழிப்பறி தொடர்பாக கோழிவாக்கம் பகுதியை சேர்ந்த சூர்யா, ரஹித் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்து இருசக்கர வாகனம் மற்றும் செல்போனையும் பறிமுதல் செய்தனர். 

Night
Day