திருவள்ளூர்: இளைஞருக்கு அரிவாள் வெட்டு - 6 பேர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் தொழில் போட்டி காரணமாக இளைஞரை வெட்டிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். மாதவரம் பொன்னியம்மன்மேடு பகுதியை சேர்ந்த பிரேம்சுந்தர் என்பவர் தனியார் நிறுவனத்தில் மேஸ்திரியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று பணி முடித்து வெளியே வந்த பிரேம்சுந்தரை, மர்மநபர் கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றது. இதில் படுகாயமடைந்த இளைஞரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் அதே நிறுவனத்தில் வேலை பார்க்கும் அப்பன்ராஜ் மற்றும் அவரது கூட்டாளிகளை கைது செய்தனர். 

Night
Day