திருவள்ளூர்: ஓட்டுநரிடம் கத்தியை காட்டி மிரட்டி லாரியை கடத்திய 6 பேர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவள்ளூர் மாவட்டம் மாதவரத்தில் 25 டன் இரும்பு ராடுகள் ஏற்றி சென்ற லாரியை கடத்திய 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். பாடியில் உள்ள தனியார் ட்ரான்ஸ்போர்ட் கம்பெனியில் லட்சுமண பெருமாள் என்பவர் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். இவர் 25 டன் இரும்பு ராடுகள் கொண்ட லாரியை ஸ்ரீபெருமந்தூர் நோக்கி ஓட்டி சென்றார். மஞ்சம்பாக்கம் டோல்கேட் அருகே லாரியை நிறுத்திவிட்டு ஓய்வெடுத்த ஓட்டுநரை கத்தியை காட்டி மிரட்டிய மர்மநபர்கள், இரும்பு ராடுகளுடன் லாரியை கடத்தி சென்றனர். இதுகுறித்து லட்சுமண பெருமாள் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், 6 பேர் கொண்ட கும்பலை கைது செய்து, 25 டன் இரும்பு ராடுகளுடன் லாரியை மீட்டனர்.

Night
Day