திருவள்ளூர்: கத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுட்ட பிரபல கொள்ளையன் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் பல்வேறு இடங்களில் வழிப்பறியில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியை தனிப்படை போலீசார் கைது செய்தனர். மதுரவாயல், கோயம்பேடு, நொளம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் தனியாக செல்வோரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பு சம்பவங்கள் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து மதுரவாயல் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி, கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, வழிப்பறியில் ஈடுபட்ட நபர் பிரபல வழிப்பறி கொள்ளையன் ரகுமான் என்பது தெரிந்தது. இதையடுத்து திருவண்ணாமலையில் பதுங்கியிருந்த அவரை, தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் ரகுமானிடம் இருந்து 6 இருசக்கர வாகனங்கள் மற்றும் 5 செல்போன்களை பறிமுதல் செய்தனர். 

Night
Day