திருவள்ளூர்: காவலர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி இருசக்கர வாகனம் பறிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் ரோந்து பணியில் இருந்த காவலர்களிடம் பட்டா கத்தியை காட்டி மிரட்டி, இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய குற்றப்பிரிவு தலைமை காவலர்கள் சந்திரசேகர், கணேசன் ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரும்பு கம்பி ஏற்றிச் சென்ற லாரியை மடக்கிப்பிடித்து சோதனையிட முயற்சித்த நிலையில், அதில் இருந்து இறங்கிய இருவர் பட்டா கத்தியை காட்டி மிரட்டி காவலர்களின் இருசக்கர வாகனத்தை பிடுங்கிக் கொண்டு தப்பி ஓடியுள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார் ஆவடி டேங்க் பேக்டரி காவல்துறையினர், இச்சம்பவத்தில் ஈடுபட்டது வட மாநிலத்தவர்களாக இருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

Night
Day