திருவள்ளூர்: தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட 2 இளைஞர்கள் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே தொடர் பைக் திருட்டில் ஈடுபட்டு வந்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். வடமதுரை கூட்டுச்சாலையில் வழக்கம்போல் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக சந்தேகக்கும்படி வந்த  2 இளைஞர்களை மடக்கி பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இளைஞர்கள் வந்த இருசக்கர வாகனம் திருட்டு வாகனம் என்பது தெரியவந்தது. மேலும், அவர்களிடம் இருந்து 11 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

Night
Day