திருவள்ளூர்: மின் இணைப்பு மனுவை பரிசீலிக்க ரூ.3,000 லஞ்சம் - மின் வணிக உதவியாளர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் லஞ்சம் வாங்கிய மின் வணிக உதவியாளரை லஞ்ச ஒழிப்பு துறையினர் கைது செய்தனர். ஆவடி கோவில்பதாகை பழைய அக்ரஹாரம் தெருவை சேர்ந்த சுலோச்சனா என்பவர் வீடு கட்டுவதற்கு வழங்கப்பட்ட தற்காலிக மின் இணைப்பை, வீட்டு மின் இணைப்பாக மாற்றுவதற்காக மின்சார வாரியத்தில் விண்ணப்பித்துள்ளார். இதனை பரிசீலித்த மின் வணிக உதவியாளர் மரியதாஸ், 3 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து சுலோச்சனா அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற லஞ்ச ஒழிப்பு போலீசார், மரியதாசை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். 

Night
Day