திருவாரூர்: கோவில் கருவறையில் சாமி நகைகளை திருடிய மர்ம நபர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கோவில் கருவறையில் சாமியின் கழுத்தில் உள்ள நகைகளை மர்ம நபர் திருடி செல்லும் கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியாகியுள்ளன. நெடுவாக்கோட்டை கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீவீர மாக காளியம்மன் கோயில் கதவு திறந்துள்ளதை பார்த்து கிராம மக்கள் மன்னார்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கோவிலில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் மர்மநபர் கண்காணிப்பு கேமராவை திருப்பி வைத்து சாமியின் கழுத்தில் உள்ள நகைகளை திருடி செல்லும் காட்சி பதிவாகியுள்ளது. இதனையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடிய நபரை தேடி வருகின்றனர்.

Night
Day