திருவாரூர்: பைக்‍ வீலிங்கில் ஈடுபட்டு விபத்து ஏற்படுத்திய கல்லூரி மாணவன் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவாரூர் மாவட்டம் புலிவலம் அருகே பைக்‍ வீலிங்கில் ஈடுபட்டு விபத்து ஏற்படுத்திய கல்லூரி மாணவனை போலீசார் கைது செய்தனர். வேலங்குடி பகுதியில் வசித்து வரும் காதர் மொய்தீன் என்ற கல்லூரி மாணவர், அவ்வப்போது பைக்‍ வீலிங் செய்து, அதன் காட்சிகளை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்வதை வாடிக்‍கையாக கொண்டுள்ளார். இந்நிலையில் ஆர்த்தி என்ற பெண் புலிவலம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு இருசக்‍கர வாகனத்தில் சென்றபோது, எதிரே பைக்கில் வீலிங் செய்தபடி வேகமாக வந்த காதர் மொய்தீன், ஆர்த்தியின் வாகனத்தின் மீது மோதியுள்ளார். இதில் இருவரும் காயமடைந்தனர். இதனையடுத்து காவல்துறையினர் காதர் மொய்தீனை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

varient
Night
Day