திருவொற்றியூரில் கட்டுமான தொழில் செய்பவரை கடத்திய மர்ம கும்பல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை திருவொற்றியூரில் கட்டுமான தொழில் செய்பவரை 10 பேர் கொண்ட மர்ம கும்பல் போலீஸ் என கூறி கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவொற்றியூர் தியாகராயபுரம் பகுதியில் அதிகாலை 2 மணிக்கு 10 பேர் கொண்ட கும்பல் போலீஸ் எனக்கூறி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கட்டுமான தொழில் செய்யும் முகமது ஆரிப் என்பவரை அழைத்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து திருவொற்றியூர் காவல் நிலையத்தில் விசாரித்தபோது அதுபோன்ற எவ்வித தகவலும் இல்லாததால் பூட்டியிருந்த வீட்டில் எகிறி குதித்து உள்ளே நுழைந்து அழைத்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து முகமது ஆரிப்ன் மனைவி ரிஸ்வான் பாத்திமா புகார் அளித்துள்ளார். 

Night
Day