தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்த இளைஞர் சிகிச்சை பலனின்றி பலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தூத்துக்குடி அரசு வேலை கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். குரும்பூர் அருகே உள்ள நல்லூர் கிராமத்தை சேர்ந்த பூகாந் ரூபன் என்ற இளைஞர் அனைவருக்கும் அரசு வேலை வழங்க வேண்டும் என்ற பதாகையை பிடித்தபடி உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொண்டார். உடனடியாக அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 90 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

Night
Day