தூத்துக்குடி: ஓய்வு பெற்ற துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வீட்டில் 20 சவரன் நகை கொள்ளை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஓய்வு பெற்ற துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வீட்டில் 20 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முல்லை நகரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஊரக வளர்ச்சி துறை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் குமரன். இவரது மனைவி ருக்மணி துரைச்சாமி புரத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். இதனிடையே குமரன் வழக்கம் போல மாத்திரைகள் சாப்பிட்டு விட்டு அறையில் தூங்கியுள்ளார். இன்று காலை ருக்மணி வீட்டுக்கு வந்து பார்த்தபோது, பீரோவில் இருந்த 20 சவரன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது. இதுகுறித்து மேற்கு காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Night
Day