தூத்துக்குடி: கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தூத்துக்குடி அருகே மிளகாய் பொடியை தூவி கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். போல்பேட்டை மேற்கு பகுதியை சேர்ந்த  ஜெயராஜ் என்பவர் லாரி டிரான்ஸ்போர்ட் நடத்தி வருகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் நெல்லையில உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு தனது கிராமத்துக்கு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு தங்க நகை மற்றும் பணம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் மோப்பநாய்கள் கண்டுபிடிக்காத வகையில் வீட்டை சுற்றி மிளகாய் பொடியை தூவி விட்டு கொள்ளையர்கள் சென்ற நிலையில், சம்பவம் குறித்து காவல்நிலையத்தில் ஜெயராஜ் புகார் அளித்தார். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகள் அடிப்படையில் கொள்ளையில் ஈடுபட்ட நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

Night
Day