தூத்துக்குடி: ஜாங்கிரி கேட்டு தராத ஊழியரை தாக்கிவிட்டு தப்பிய போதை ஆசாமிகள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தூத்துக்குடி மாவட்டம் வீ.இ. ரோட்டில் உள்ள பேக்கரி கடையில் ஜாங்கிரி கேட்டு தராத ஊழியரை தாக்கிவிட்டு போதை ஆசாமிகள் தப்பிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. முருகன் என்பவரின் பேக்கரியில் பழைய காயல் கிராமத்தை சேர்ந்த குமார் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்த கடைக்கு அருகிலேயே டாஸ்மாக் கடை உள்ளது. இந்நிலையில் முருகன் கடைக்குள் புகுந்த போதை ஆசாமிகள் ஊழியர் குமாரிடம் ஜாங்கிரி கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். இதனால் ஏற்பட்ட தகராறில் குமாரை சரமாரியாக தாக்கிவிட்டு அவர்கள் தப்பியோடினர். இது தொடர்பாக கடை உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தப்பியோடிய நபர்களை தேடி வருகின்றனர்.

Night
Day