தென்காசி: மதுபோதையில் இருந்த இளைஞர் மீது போலீசார் கொடூர தாக்குதல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தென்காசி பேருந்து நிலையத்தில் மதுபோதையில் இருந்த இளைஞரை, போலீசார் காலால் உதைத்து கொடூரமாக தாக்கும் பதைபதைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது. தென்காசி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த அபி என்பவர், மதுபோதையில் புதிய பேருந்து நிலையம் அருகே பைக்கில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் அவரை வழிமறித்து வாகனத்தை பறிமுதல் செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் போலீசாரை தாக்க முற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த போலீசார், இளைஞரை காலால் உதைத்து கொடூரமாக தாக்கினர். 

Night
Day