தென்காசி: மாணவிக்‍கு பாலியல் தொல்லை அளித்த கல்லூரி தாளார் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தென்காசி மாவட்டம்  பாவூர்சத்திரம் அருகே மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கல்லூரி தாளளர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டதுடன் கல்லூரிக்‍கும் சீல் வைக்‍கப்பட்டது. திப்பணம்பட்டி கிராமத்தை சேர்ந்த வினோத் குமார் என்பவர் தென்காசி-நெல்லை சாலையில் தனியார் டிப்ளமோ நர்ஸிங் பாரா மெடிக்கல் கல்லூரி நடத்தி வருகிறார். அங்கு பயிலும் ஒரு மாணவிக்‍கு வினோத்குமார் பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வினோத்குமாரை போலீசார் போக்‍சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், கல்லூரிக்‍கு அதிகாரிகள் சீல் வைத்தனர். 

Night
Day